Thursday, January 04, 2007

இப்படியும் ஆசை..


நதிக்கரை ஓரம் பார்த்து
நாணலால் கூரை வேய்ந்து
புதுப்புதுத் தென்றல் வந்து
புகுந்திட வாசல் வைத்து
அதிசய வானத்தை நான்
அண்ணாந்து பார்த்துக் கொண்டே
ஒதுங்கவே பிரியம்; புல்லில்
உறங்கவே பிரியம் - உண்மை
-------
அன்பர்கள் வரலாம்; என்னை
அறிந்தவர் வரலாம்; சிந்தும்
கண்ணீரைப் பிளந்து பார்க்கும்
கவிஞர்கள் வரலாம்; வாழ்வை
மன்னிக்கத் தெரிந்து கொண்டு
மவுனத்தை பேசிக் கொண்டு
விண்மீனை எண்ணிக் கொண்டு
விடிகாலை வரை இருப்போம்.

-- வைரமுத்து.

1 comment:

Anonymous said...

any updates coming ?