Saturday, June 03, 2006

இளையராஜா


இளையராஜா


சில பாடல்கள் மனதை உரசிவிட்டு பின் சட்டென காணமல் போகுமே...

இன்னும், சில பாடல்கள் ஒரு உலுக்கு உலுக்கி காத்துல வீசிவிட்டுப் போகுமே...

சில பாடல்கள், மனதுக்குள்ளேயே சாகும் வரை உண்ணா விரதம் இருக்குமே ...


அந்த பாட்டுக்களுக்கெல்லாம் ஒரே முகவரி 'இளையராஜா'....

1984 ல் இருந்தே எனக்கு இளையராஜவை பிடிக்கும் (அதுக்கு முன்னாடி தான் நான் பொறக்கலயே :) !).

எனக்கு இருக்கிற ஒரே Doubt இதுதான்: எப்படி இத்தன பாட்டுக்கும் unique tune யோசிக்கமுடியுது...! ! யோசிக்கவே ரோம்ப கஷ்டமத்தான் இருக்கு.

மாணிக்கவாசகரின் திருவாசகத்தை School la கேட்கும்போது உருகி... உருகி... தூங்கியதுண்டு...

இளையராஜாவின் சிம்பொனியில கேட்ட போதுதான் மாணிக்கவாசகரோட அருமையே புரிந்தது.. :)

இப்போதுள்ள சில பாட்டை கேட்கும் போது... என்னைக்கு காது Segmentation_fault னு சொல்லப் போகுதோனு பயமாயிருக்கு!

எல்லோரையும் போல் என்னோட ஆசையும் இது தான்... ராஜா மீண்டும் வைரமுத்துவுடன் கை கோர்க்க வேன்டும்...

அந்த 1984 மீண்டும் வர வேண்டும்...

2 comments:

Sumithra said...

I can clearly see what you mean, especially about today's songs - if you call them that. It will be great if he and Vairamuthu work together again.. but I dare not hope, it's been a long long time and they are still apart..

Manivannan P said...

Yes, yes.. Both clearly said they would never join again. As you know they were ruling the 'Tamil Music World' during 1980's. Their songs are Master Pieces! Still standing untoucables!